கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆறு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆறு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனாவிலிருந்து 78 ஆயிரத்து 947 பேர் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 683 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 464 பேர் உயிரிழந்துள்ளனர்.
” சுக போகங்களும் வெளிநாட்டு பயணங்களும் இல்லாமல் போனதையடுத்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் திலகரை நினைத்து கவலைப்படுகிறேன்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தொழிலாளர் தேசிய முன்னணி கலைக்கப்பட்டதாக அறிவித்து இருக்கிறாரே? இது குறித்து உங்க பதில் என்ன என கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
” தொழிலாளர் தேசிய முன்னணியை ஒருவரால் மட்டுமே கலைக்க முடியும் என்றால் எதற்கு நிர்வாக சபை ? திலகர் வாயில் சனி பிடிச்சிருக்கு அவருக்கு எதிரியே அவர்தான்.
பாவம் அவரை நினைத்து அழுவதா? சிரிப்பதா ? சமூக வலைத்தளங்களில் அவர் எழுதும் பதிவுகள் ஊடாக அவருக்கே ஆவர் ஆப்பு வைத்து கொள்கிறார்.
அவர் விமர்சனங்களை விட்டு மௌனமாக இருந்து இருந்தால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் எம்மோடு இணைந்து போட்டியிட்டுருக்க முடியும்.
என்ன செய்ய அவரது வாயே அவருக்கு எதிரியாகிவிட்டது. அதைவிட அவர் பாரளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தோட்ட மக்களை நேரடியாக சென்று பார்த்ததை விட வெளிநாடுகளுக்கு சென்று பேஸ்புக்கில் படங்கள் போட்டதே அதிகம்.
அதுமாத்திரமா பாரளுமன்ற சலுகைகள் ராஜதந்திர கடவுசீட்டு எல்லாமே அவரிடம் அன்று இருந்தது இன்று எதுவும் இல்லை. சுகம் அனுபவித்த அவருக்கு இப்போது ஒன்றுமே இல்லாததன் காரணமாக எதை எதையோ சொல்கிறார்.
நான் அவரை குறித்து கவலைப்படுகிறேன். என்னசெய்ய அவர் புதிய கட்சி தொடங்கட்டும் அது அலரது தனிப்பட்ட விருப்பம் .” – என்றார்.
நன்றி – அண்ணாச்சி இணையம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம் கொஸ்லந்தை நகரில் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்தது.
ஊழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெறக்கூட சுதந்திரமற்ற மக்களாக தோட்ட தொழிலாளர்கள் விளங்குவதாகவும், அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் செயலாளர் வசந்த அபேகோன், இணை அமைப்பாளர் மார்க்ஸ் பிரபாகர், பொது மக்கள் ஆகியோர் எதிர்ப்பு வாசகங்கள் பொறித்த பதாதைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
நியாயமான சம்பளத்தையும் இந்த அரசாங்கம் வழங்க வேண்டும், ஏனைய மக்களை போல சுதந்திரமாக வாழ வழி செய்ய வேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை, சுகாதாரம், கல்விக்கான வளங்கள், முகவரிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற கோரிக்கைகளை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.
க.கிசாந்தன்
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருவது இந்தியாவின் வழமையான புலம்பல்தான். 13ஆவது திருத்தச் சட்டத்தை புதிய அரசமைப்பின் ஊடாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதே அரசிலுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களின் நிலைப்பாடு என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
” அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகத் தமிழர்களின் வேணவாக்களுக்குத் தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கையைக் கோருகின்றோம்.
இலங்கை ஒருமைப்பாடு பேணப்பட வேண்டிய அதே நேரத்தில், இலங்கைத் தமிழர்களின் கௌரவம், சம உரிமை என்பவை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு.” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இது இந்தியாவின் வழமையான புலம்பல். 13ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு. புதிய அரசமைப்பில் அதற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்பது அரசிலுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களின் நிலைப்பாடு.
புதிய அரசமைப்பின் ஊடாகவே தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கப்படும். இலங்கையின் அரசியல் தீர்வு விடயம் தொடர்பிலோ அல்லது நீதிப் பொறிமுறை தொடர்பிலோ வெளிநாடுகள் முடிவு எதனையும் எடுக்க முடியாது.
இறைமையுள்ள எமது நாடே அது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும். வெளியிலிருந்து இலங்கைக்கு எவரும் அழுத்தங்களை வழங்க முடியாது- என்றார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருக்கும் ஶ்ரீலங்கா சுதந்திக்கட்சி, மொட்டு அணியினரின் செயற்பாடுகளை வெளிப்படையாகவே விமர்சித்துவருகின்றது.
தமது கட்சி உறுப்பினர்களுக்கு உரிய கவனிப்பு இல்லை எனவும், தேர்தலுக்காக மட்டுமே தமது கட்சி பயன்படுத்தப்படுகின்றது எனவும் சுதந்திரக்கட்சிக்கார்கள் ஊடகங்களிடம் தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலின்போது சஜித் அணியுடன் இணைந்து போட்டியிடவேண்டும், தற்போது ரணில் தரப்பு அவர்களுடன் இல்லை என்பதால் கூட்டணி சாத்தியமாகும் என கட்சி உறுப்பினர்கள் சிலர், சு.கவின் மத்திய குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.
அத்துடன்,மொட்டு கட்சியுடன் பேச்சு நடத்திய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவேண்டும் என மேலும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சு.கவுக்குள்ளும் கருத்து மோதல் வலுத்துள்ளது.
விரைவில் தீர்க்கமானதொரு முடிவு எடுக்கப்படவுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் சில பங்காளிக்கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பஸில் ராஜபக்ச கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்துக்குள் இருந்துக்கொண்டு எதிரணியின் பணியை எவரும் முன்னெடுக்க முடியாது எனவும், அவ்வாறானவர்களை வெளியேற்றுவதைத்தவிர வேறு வழியில்லை என கடும் தொனியில் விமர்சித்தார் எனவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும், அக்கட்சியின் புதுமுக எம்.பிக்களுக்குமிடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
இதன்போதே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோரை இலக்கு வைத்து பஸில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார் தெரியவருகின்றது.
பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதை தடுப்பதில் மேற்படி தலைவர்களே முன்னின்று செயற்பட்டனர். இவர்களுக்கு சார்பான தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் பஸில்மீது விமர்சனக் கணைகளைத் தொடுத்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 62 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 2,370பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.