பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் காலமானார்
நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் இன்று (05) தனது 79ஆவது வயதில் காலமானார்.
டுபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை...
மகன் செய்த தவறுக்கு தாய்க்கு தண்டனை
சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணின் சடலம் நேற்று (04) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வீதியில் இடம் பெற்றுள்ளது.
சூரியவெவ வீரியகம பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த...
குட்டி தேர்தலில் ஜே.வி.பி. வென்றால் கோவணத்துடன் ஓடுவேன் – சனத் நிஷாந்த சவால்
" உள்ளாட்சிசபைத் தேர்தலில் மொட்டு கட்சியை (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன) விடவும் ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஒரு வாக்கையாவது அதிகம் எடுத்தால் கோவணத்துடன் ஒடுவதற்கு நான் தயார்."
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சனத்...
லிட்ரோ எரிவாயு விலை உயர்வு
இன்று (05) முதல் லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவை பிரதமராக்க மொட்டு கட்சிக்குள் எதிர்ப்பு
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவது தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் இருவேறு கருத்துகள் நிலவிவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு தினேஷ் குணவர்தன தயார் நிலையில் இருப்பதாகவும், எனவே, மஹிந்தவை மீண்டும்...
சுதந்திரம் எங்கே? போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிசாரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது! சமூக ஆர்வலர்களின் கூட்டு கண்டனம்
சுதந்திரம் எங்கே? என்ற தொனிப் பொருளில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய 24 மணி நேர சத்தியாகிக்கரகத்தின் மீது பொலிசார் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக சமூக ஊடக ஆர்வலர்களின்...
லிட்ரோவின் முக்கிய அறிவிப்பு இன்று
லிட்ரோ சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.இது குறித்து அறிவிப்பதற்காக லிட்ரோ நிறுவனம் இன்று முற்பகல் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையால் எரிவாயு விலை...
34,000 ஆசிரிய நியமனங்களை வழங்க நடவடிக்கை
பாடசாலையில் மார்ச் மாத புதிய தவணை ஆரம்பிப்பதற்கு முன்பாக 34,000 ஆசிரிய நியமனங்களை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க 26,000 பட்டதாரி ஆசிரியர்கள், 8,000 கல்வியற் கல்லூரியிலிருந்து...
ஜன்னல் இருக்கைக்காக விமானத்தில் சண்டையில் ஈடுபட்ட பயணிகள்!
பிரேசிலில் விமானம் ஒன்றின் ஜன்னல் இருக்கைகாக பயணிகளுக்கு இடையே நடந்த சண்டையை தடுக்க விமானத்தின் கேபின் குழுவினர் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பெப்ரவரி 2ஆம் திகதி சால்வடாரில் இருந்து சாவ்...
75ஆவது சுதந்திர தின விழா சிறப்பு மத சடங்குகள் ஜனாதிபதி தலைமையில் கண்டியில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (02) மாலை கண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகையில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் ஆரம்பமாக கண்டி தலதா மாளிகையில்...












